
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி 9 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அலைகள் தாக்கின. இந்த பேரழிவில் சிக்கி இறந்தவர் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டிவிட்டது. புகுஷிமா அணு உலைகளும் பாதிப்படைந்தன. இதன்பிறகு ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இன்று காலை புகுஷிமாவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து, புகுஷிமா மற்றும் மியாகி கடற்கரைகளை சுனாமி அலைகள் தாக்கலாம் என ஜப்பான் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது. இந்த இரு பகுதிகளும் கடந்த மார்ச் மாதம் வந்த சுனாமியால் வெகுவாக பாதிக்கப்பட்டவை. அரை மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. சேத விவரங்கள் பற்றி உடனடியாக தகவல் இல்லை.


இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட நிலம் மற்றும் நீரிலும் செல்லும் 50க்கும் மேற்பட்ட கார்கள் சுவிட்சர்லாந்து நியூசாடெல் ஏரியில் சென்ற வியாழன்று கொண்டுவரப்பட்டது. அந்த கார்களில் குடைகள்,கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்ததுஅந்த கார்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள்,நாய்களோடு தண்ணீரில் சென்று மகிழ்ந்தனர்.

சோதனையின் கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் காட்டப்படாத ரொக்கம், தங்கம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பரிசீலித்த பிறகே வியாபாரத்தின் மூலம் எவ்வளவு வருவாய் வந்தது. வருமானவரி செலுத்தப்பட்டுள்ளதா? வரி ஏய்ப்பு எவ்வளவு நடந்துள்ளது போன்ற அனைத்து விவரங்களும் தெரியவரும் என்று வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கழகத்தை நம்பி பயன் இல்லை... இனி கடவுளை நம்புவோம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோயிலில் விசேஷ பூஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்:தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்!

கழகத்தை நம்பி பயன் இல்லை... இனி கடவுளை நம்புவோம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர். ஆம்! கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கோயிலில் விசேஷ பூஜை செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.
அந்த முன்னாள் அமைச்சர்கள் சாட்சாத் கே.என்.நேருவும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும்தான்.
நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சங்கரன்கோயிலில் உள்ள சங்கரநாராயணர் கோயில். அரியும், சிவனும் ஒன்று என்கிற ஒப்பற்ற தத்துவத்தை விளக்குவது இத்தலம். அனைத்து அரசியல் வி.ஐ.பி.க்களும் இங்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசித்து விட்டு, அம்பாள் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரக் குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார பூஜைகள் செய்வதும் வாடிக்கை.
‘இங்கு சென்று விசேஷ பூஜைகள் செய்தால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்’ என்று யாரோ நேருவின் காதுகளில் ஓத... அவர், ஏற்கெனவே மிரண்டு போயிருக்கும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார்.
‘அப்பாடா...! விமோசனம் பிறந்தது’ என்று இருவரும் ஒன்றாக அந்தக் கோயிலுக்குச் செல்வது என்று ‘பிளான்’ போட்டனர்.
அதன்படி, கடந்த 17-ம் தேதி தி.மு.க. கொடி கட்டிய சொகுசு கார்கள் சங்கரநாராயணர் கோயில் முன்பு வந்து நின்றன. தொண்டர்கள் புடை சூழ கோயிலுக்குள் நுழைந்தனர் மாஜிக்கள். தங்கள் கூடவே பட்டர் ஒருவரையும் அழைத்து வந்தனர்.
காரிலிருந்து இறங்கியவர்கள் நேராக சன்னதிக்குச் சென்று சுவாமியையும், அம்பாளையும் தரிசித்தனர். அம்பாள் சன்னதியிலிருக்கும் ஸ்ரீசக்கரக் குழியின் மகிமைகள் பற்றி பட்டர்கள் எடுத்துக் கூற, மாஜிக்கள் இருவரும் பயபக்தியுடன் ஸ்ரீசக்கரக் குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
அதன்பின்னர், கோயிலில் உள்ள சர்ப்ப விநாயகர் சன்னதிக்குச் சென்று ஸ்பெஷல் பூஜைகள் செய்தனர். 51 திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே பக்திப் பரவசமாகியிருந்தனர்.
அப்போது பன்னீர்செல்வத்தைப் பார்த்து, ‘‘நல்லா சாமி கும்பிட்டுக்கப்பா.... யாரு முதலில் உள்ளே போறாங்கன்னு பார்ப்போம்’’ என்று நேரு கிண்டல் செய்ய, பன்னீர்செல்வத்தின் முகம் வெளிறிப்போனது. இரண்டு மணி நேரம் ஸ்பெஷல் பூஜை செய்து விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர்களை மடக்கி நிருபர்கள் கேள்வி கேட்க பதில் சொல்லாமல் சென்று விட்டனர்.
அவர்கள் வந்த நோக்கம் பற்றி தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் மணி பட்டரிடம் கேட்டோம்.
‘‘பொதுவாக கால சர்ப்ப தோஷம் பிடித்தவர்கள் ஜெயிலுக்குப் போவது தவிர்க்க முடியாதது. அந்த கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காகவே சர்ப்ப விநாயகருக்கு ஸ்பெஷல் பூஜைகள், அபிஷேகம் செய்திருக்கிறார்கள் முன்னாள் அமைச்சர்கள். அதிலும் இன்று சங்கட ஹர சதுர்த்தி, விநாயகருக்கு உகந்த நாள். இந்த நாளில் சர்ப்ப விநாயகருக்கு பூஜைகள் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை’’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக