திங்கள், 1 ஆகஸ்ட், 2011

01.08.2011 முக்கிய செய்திகள்

01.08.2011 news

பாரிய குழியுள் விழுந்த தன் எஜமானை காப்பாற்றிய நாய்!

நன்றிக்கு முன்னுதாரணம் நாய்தான்! இதற்கு ஈடு இணை இதுவரையில்லை! 53 வயதான ஒருவர் தனது விடுமுறையை களிப்பதற்காக தனது மனைவி மற்றும் நாயுடன் உயரமான மாலையொன்றில் ஏறியிருக்கிறார்!

துரதிர்ஷ்டவசமாக கால் தவறி விழுந்துள்ளார்! மரமொன்றின் உதவியால் மேலே வர முயற்சிக்கும் போது , அது முறிவடைந்து 200 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்திருக்கிறார்!

உடனே அவரின் அன்பு நாய் அருகிலிருந்த தீயணைப்பு படைவீரர்களுக்கு சிக்னல் கொடுத்து தன் எஜமானின் உயிரைக்காப்பாற்றியுள்ளது, மனிதர்கள் தக்க சமயத்தில் உதவி செய்ய மறுத்தாலும் , இது போன்ற பிராணிகள் நாம் கொடுத்த உணவுக்காக என்றுமே நன்றியுடன் இருக்கின்றன .... நன்றி கேட்ட மனிதனை விட நாய்கள் மேலடா கண்ணதாசனின் கவி வரிகள் நினைவுக்கு வருகிறது


லங்கை வலைப்பாந்தாட்ட அணியைச்சேர்ந்த வீராங்கனைகளில் இருவர் தன்னினச் சேர்க்கையாளர்.

இலங்கையின் தேசிய வலைப்பாந்தாட்ட அணியைச் சேர்ந்த வீராங்கனைகளில் இருவர் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டு உள்ளார்கள். உலக கிண்ணத்துக்கான வலைபந்தாட்டப் போட்டி கடந்த 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இடம்பெற்றது. இதில் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வீராங்கனைகளில் சிலர் சிங்கப்பூரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை கொழும்பில் பூதாகரமாக வெடித்து உள்ளது.

குறிப்பாக வீராங்கனைகளில் இருவர் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அகப்பட்டுக் கொண்டனர். இவர்கள் ஸ்கொட்லாந்து நாட்டுக்கான சுற்றுப் பயணத்தின் போதும் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டு ஏற்கனவே மாட்டுப்பட்டு இருந்தனர்.

இலங்கை அணியைச் சேர்ந்தவர்களில் சிலர் அணியின் ஒழுங்கு நடைமுறைகளை மீறி இரவில் சிங்கப்பூர் வீதிகளில் ஷொப்பிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

இதனால் இலங்கையின் விளையாட்டு அமைச்சு அதிகாரிகளுக்கும் வலைப்பந்தாட்ட அணியினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு இருக்கின்றது.

நாடு திரும்பிய பிற்பாடு வீராங்கனைகள் அனைவரையும் அழைத்து அணியின் முகாமையாளர்கள் கடுமையாக எச்சரித்து இருக்கின்றார்கள். குற்றவாளிகளாக காணப்படுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார்கள்.

ஆனால் அணியினரின் செயல்பாடுகள் உலக கிண்ணத்துக்கான போட்டியின்போது எப்படி அமைந்தன? என்பது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்ற அறிக்கையில் தன்னினச் சேர்க்கை செயல்பாடுகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன.

ஆயினும் அமைச்சருக்கு இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் இவை குறித்து முறையிட்டு உள்ளமையுடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டும் உள்ளார்.


பேஸ்புக்கில் ஸ்கைப்பை பயன்படுத்த ஒரு வழி!

நாம் பேஸ்புக்கில் பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து பேச விரும்பினால் இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம்.

ஆனால் பேஸ்புக்கில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை பேஸ்புக் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது? இதற்கு ஸ்கைப்பிலே வசதி உள்ளது.

நீங்கள் செய்ய வேண்டியது ஸ்கைபிலே சென்று contacts ->import contacts ஐ சொடுக்குங்கள். அதன் பின்னர் ஒரு விண்டோ தோன்றும்.

அதில் உங்கள் பேஸ்புக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள்.

சற்று நேரத்திலே உங்கள் பேஸ்புக் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும்.

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலி
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியானார்கள். இதில் அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் மின்னலுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.
இன்று பிஜுப்பூரில் 3 பேரும், கத்திகரில் 2 பேரும், ரோகத்ஸ் மற்றும் அர்வால் மாவட்டங்களில் தலா ஒருவரும் என 7 பேர் பலியாகி உள்ளதாக மாநில துயர் துடைப்பு துறை நிர்வாக செயலாளர் வயாசிஜி தெரிவித்து உள்ளார்.
மின்னல் தாக்கி பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 1/2 லட்சம் நிவாரண உதவித்தொகை அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்து.

புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சிக் குரங்கு!

மனிதர்களின் நெருங்கிய உறவினர்களைப் போல இருக்கிறது அவைகளின் செய்கைகள்… மரபணுக்களில் கூட சிறிய மாற்றம் தான் உள்ளது போலும்… இந்தச் சிறிய சிப்பன்சி குரங்கின் தாய்மை உணர்வைப் பாருங்கள்....

இரண்டு வருடங்களே ஆன சிம்பன்சிக் குரங்கு ஒன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன புலிக்குட்டிக்கு புட்டிப்பால் ஊட்டி நெருங்கி உறவாடும் காட்சிகளே இவையாகும். மேற்படி காட்சிகள் தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக்கில் உள்ள Samut Prakan முதலைப் பண்ணை மற்றும் மிருகக்காட்சிச் சாலையிலேயே எடுக்கப்பட்டன...........காணொளி உள்ளே.


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com