வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

26.08.2011 இன் சிறப்பு செய்திகள்.

கனடாவில் உள்ள பல்ஹவுசி பல்கலைக்கழக விஞ்ஞானி போரிஸ்வோர்ம் தலைமையிலான குழுவினர் உலகில் வாழும் உயிரினங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து 87 லட்சத்து 40 ஆயிரம் உயிரினங்கள் உலகில் வாழ்ந்து வருகின்றன என தெரிவித்துள்ளனர். தற்போது 23 சதவித உயிரினங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 சதவிதம் உயிரினங்கள் நிலத்திலும், 9 சதவீதம் கடலிலும் வாழ்கின்றன.

அதன் மூலம் இதுவரை 10 லட்சத்து 30 ஆயிரம் உயிரினங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் 90 சதவித உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

லிபிய அதிபர் கடாபி அவர்களின் சுகபோக வாழ்கையை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போராளிகள்!

லிபிய கிளர்ச்சியாளர்கள் கடாபியின் 'பாப் அல் அஷீசியா' வளாகத்தினுள் நுழைந்து அவ்விடத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில் அவரது வாசஸ்தலம் மற்றும் அதனுள் காணப்பட்ட வசதிகள் தொடர்பில் வெளியுலகுக்குத் தெரியவர ஆரம்பித்துள்ளது.

கடாபியின் வளாகத்தினுள் சிறார்களுக்கான பூங்கா, சிறிய மிருகக்காட்சிசாலை என்பன காணப்படுகின்றன.

கடாபியின் வாசஸ்தலத்தினுள் பெரிய நீச்சல் தடாகமொன்றும் காணப்படுகின்றது. மேலும் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் வாசஸ்தலத்தின் பெரும்பாலான பகுதி மற்றும் தளபாடங்கள் ஆகியன சிதைவடைந்துள்ளன.

கடந்த சில தினங்களாக அங்கு நடைபெற்றுவரும் உக்கிர மோதல்களில் சிக்கி 400 பேர் வரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




கனடாவின் டொரண்டோ நகரில் நேற்று 24.08.2011 இரவு பயங்கர இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. அதனால் டொரண்டோ நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நகர மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டதுடன் மின்சாரம் தடைபட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி சூறாவளி காற்று முற்றிலும் நின்றுவிட்டது. அதனால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. டொரண்டோ மட்டுமின்றி ஹாமில்டன், பர்லிங்டன், Oakville, மில்டன்,Mississauga போன்ற நகரங்களிலும் புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

எனினும் நயாகரா, விண்ட்சர், Leamington, எஸ்ஸெக்ஸ் கவுண்டி, ரோட்னி, Aylmer, தில்லி, Simcoe,செயின்ட் Catharines, கிரிம்ஸ்பி, Welland போன்ற இடங்களில் புயல் எச்சரிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெற்கண்ட நகரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் போல அப்பிள் நிறுவனம் தொடர்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது வெளியாகியிருக்கும் செய்தியானது அப்பிள் நிறுவனத்திற்குs சற்று கவலையளிக்கும் விடயமாகும்.

ஆம், அப்பிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளா. அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இமாலய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர்.
கடந்த சில காலங்களாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆயுட்காலம் சிறிது நாட்களே என செய்திகளும் வெளியாகியிருந்தன.
எனினும் தற்போது அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஜொப்ஸ்(56) தனது ராஜினாமா கடிதத்தினை அப்பிள் நிர்வாக சபையிடம் நேற்று புதன்கிழமை கையளித்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு முதல் இவர் இப்பதவியை வகித்துவந்தார். இவருக்கு அடுத்த படியாக இப்பதவியை டிம் குக் ஏற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண கராஜ் ஒன்றினுள் ஆரம்பிக்கப்பட்ட அப்பிள் நிறுவனத்தை உலகத் தரமிக்கதாகவும் உலகின் தலைசிறந்த தொழிநுட்ப நிறுவனமாகவும் மாற்றியதில் பெரும் பங்கு ஜொப்ஸினுடையது.
பதவியிலிருந்து விலகிய போதும் அப்பிள் நிறுவனத்தின் தலைவராக அவர் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர்
அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார்.
அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.


தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர்

நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து

வைத்துள்ளார். அந்த எழுத்துக்களை விண்ணில் பறந்தபடியே

பார்க்க முடிகிறது. இந்த எழுத்துக்கள் �பேஷ்புக்� இணைய

தளத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றை தண்ணீரால் அழிக்க

முடியாதபடி எழுதப்பட்டுள்ளது.

சமீபத்தில், இவர் ரூ.12 கோடிக்கு உலகின் மிக விலை

உயர்ந்த அதிநவீன காரை வாங்கினார். அபுதாபியில் இவருக்கு

ஆட்டோமொபைல் மியூசியம் உள்ளது. அதில் கவர்ச்சிகரமான

200 வெளிநாட்டு கார்கள் உள்ளன. இவர் மிகப்பெரிய ஒரு

லாரியை வடிவமைத்துள்ளார். அது அவரது மாளிகையை

விட 64 மடங்கு பெரியது.



கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com