திங்கள், 18 ஜூலை, 2011

18.07.2011 இன் முன்னணி செய்திகள்

ஹிலரி கிளிங்கடன் அவர்கள் நிச்சயமாக இலங்கைத் தமிழர் குறித்துப் பேசுவார்:தலையை பிக்கும் ஸ்ரீலங்கா!


அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஒருவர் சென்னை சென்று தங்கி அம்மாநில முதல்வரைச் சந்திக்கவிருப்பது வரலாற்றில் இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகிறது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளரும் உலகில் பலம்மிக்க பதவியொன்றில் உள்ளவருமான திருமதி கிளிங்கடன் அவர்கள் சென்னை செல்லவுள்ளார். அவர் சென்னையில் தங்கியிருக்கும் நாட்களில், அம்மாநில முதல்வர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து உரையாடவுள்ளார். இருப்பினும் இவரது விஜயம் ஒரு அரசியல் அல்லது உத்தியோகபூர்வ விஜயம் அல்ல எனவும், அவர் பெண்கள் மேம்பாடு மற்றும், வணிகம் சம்பந்தமாகவே சென்னை செல்வதாகவும் அமெரிக்கா கண்டிப்பாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை செல்லும் திருமதி கிளிங்கடன் அவர்கள்......மேலும்.


‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தின் இசை வெளியீடு!

(வீடியோ இணைப்பு)
ஈழம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு புகழேந்தி தங்கராஜை அறிமுகப்படுத்த தேவையில்லை.


இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த நேரத்திலெல்லாம் தமிழகத்தில் ரத்த கண்ணீ­ர் வடித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர்களின் படையில் முதல் ஆளாக நிற்பவர் இவர். இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் தன் பணியை அயராது செய்து வருகிறார் இவர். அதற்கு உதாரணம் ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற படம். தமிழகத்தில் சிகிச்சைக்காக வந்திருக்கும் ஈழ இளைஞன் ஒருவனை பற்றிய கதை அது. அந்த ஒரு காரணத்திற்காகவே தணிக்கை துறையினரோடு ஒரு மல்லுக்கட்டியவர்தான் இவர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற படத்தை......மேலும்

டக்ளஸ் தேவானந்தாவை தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும்:மனோ கணேசன்.

வன்னியில் நடந்த கடைசிக் கட்டப் போரில் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வரும் கொல்லப்படவில்லை என்று வாய் கூசாமல் பொய் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அவரைத் தமிழன் என்று கூறவே வெட்கப்படவேண்டும்.

தமிழன் என்று மட்டுமல்ல, மனிதன் என்று கூறுவதற்கே வெட்கப்படவேண்டும் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

தென்னிலங்கையில் அரசுக்கு வாக்களித்த மக்கள் அங்கு ஜனாதிபதியையும் அமைச்சர்களையும் காணவில்லை என்று தேடுகிறார்கள்.......மேலும்.

தமிழினத்துக்குரிய வீரத்துடன் தமிழ்மக்களுக்காக உயிரை வெறுத்து பிரச்சாரத்தில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
இலங்கை அரசின் போர்குற்ற மற்றும் மானிடத்துக்கு எதிரான செயற்பாடுகளிற்கு எதிராக சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அவற்றில் இருந்து விடுபடவும், தமிழரின் நீதியான தேசிய உணர்வுகளை சிதைக்கவுமென கங்கணம் கட்டிக்கொண்டு

ஜனாதிபதி குடும்பத்தினரும் அமைச்சர்கள் பரிவாரங்களும் வரலாற்றில் இல்லாத அளவில் வாக்குறுதிகளும், நன்கொடைகளும் அன்பளிப்புக்களும், அடாவடித்தனங்களுடனும் ஒப்பீட்டளவில் அதிகாரங்கள் ஏதுமற்ற அதிகாரசபைக்கான வடபகுதி.......மேலும்


தமிழ் மக்களிடம் செருப்படி வாங்கிய ஈ.பி.டி.பி

ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொண்று குவித்த மகிந்தரின் புகைப்படங்கள் அடங்கிய தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வல்வெட்டித்துறையில் வினியோகிக்கவேண்டாம் என அப் பகுதியில் உள்ள சில பொதுமக்கள் ஈ.பி.டி.பி யினரை எச்சரித்துள்ளனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாது வல்வெட்டித்துறை நகரசபைக்கு போட்டியிடும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்தர் வைரமுத்து பரமானந்தராசா துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை அவர் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தவேளை மின்னல்போல் நுளைந்த பொதுமக்களில் சிலர் அவரை உதைத்துள்ளனர்.


தமிழினத்திற்கு தலைமை தாங்கிய தலைவன் பிறந்த மண்ணில் உம்மைப்போன்ற துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும்.........மேலும்.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com