
கறுப்பு இனமக்கள் அதிகம் வாழும் வடக்கு லண்டன் டொடென்ஹாம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வன்முறைகளில் பல கட்டிடங்கள், வாகனங்கள், தீக்கிரையாக்கப்பட்டதுடன், அப்பகுதியில் காவல்கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதும் பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதனால் காவல்துறையினர் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை அப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும், இச்சம்பவத்தில் 29வயதான மார்க் டக்கன் என்ற கறுப்பு இன இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
காவல்துறையினரின் வாகனங்கள், மற்றும்
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த போதிலும் வாகனங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு உள்துறை செயலாளர் திரேசா மே கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு நகர காவல்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் நாசகார வேலைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வன்முறை ஒரு போதும் பிரச்சினைக்கு தீர்வாக முடியாது என்றும் தலைமை அமைச்சர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிலமை இப்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்ற போதிலும் இப்பகுதியில் பதற்றமான சூழலே காணப்படுவதாக நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வடக்கு லண்டன் நகரான ரொட்டென்ஹாமில் வீதிகளில் அவசர சேவைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இன்று காலையிலும் கிரிமினல் நடவடிக்கை இடம்பெற்றதாகவும் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்றதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
லண்டன் தீயணைப்புப்படையினர் கட்டங்கள் எரிவதை அணைப்பதில் ஈடுபட்டிருந்தனர். தீ பரவுவது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
‘ கடந்த இரவு ரொட்டன்ஙாமில் இடம்பெற்ற வன்செயலை கண்டிக்கின்றேன்’ என்று உள்துறைச் செயலாளர் திரேஸா மே தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பு, பொதுச் சொத்துக்களை அழிப்பது ஆகியனவற்றை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார்.
நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நகர காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவும் உண்டு என்றும் அவர் சொன்னார்.
ரொட்டன்ஹாம் கலவரம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தலைமை அமைச்சரின் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன்றைய நவ நாகரிக உலகில் இந்த சீனச் சிறுவனின் பரிதாப நிலையைப் பாருங்கள். 12 வயதேயான குறித்த சீனச் சிறுவன் தனது மாமாவினால் இரண்டு வருடங்களாக சங்கிலியினால் கட்டப்பட்டு உள்ளான்.

குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டதால் தான் சொந்த பாதுகாப்பு கருதி கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் படங்களைப் பார்த்த பின்னர் ஏராளமான பொது மக்கள் உண்மையிலேயே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
வடகிழக்கு சீனாவின் Heilongjiang மாகாணத்தில் உள்ள Erlongshan என்ற கிராமத்தில் உள்ள மாமாவின் வீட்டிற்கு வெளியே சிறுவன் கட்டி வைக்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவனது மாமாவான Cai Quan கருத்துத் தெரிவிக்கையில்,
சிறுவனால் பேச முடியாது. தாமதமாகவாவது பேசுவான் என்று அவரது பெற்றோர்கள் நம்பினார்கள்.
ஆனால் அவன் மனதளவில் ஊனமுற்றவனாகக் காணப்படுகின்றான்.


| காண்டா மிருகத்திற்கு நடந்த கொடுமை (படங்கள் இணைப்பு) |

தென்கிழக்கு ஆசியா பகுதியில் மருத்து தயாரிக்க காண்டாமிருகத்தின் கொம்பு பயன்படுத்த படுகிறது. இதற்காக ஆப்பிரிக்க காட்டில் லுள்ள காண்டா மிருகத்தை கொன்று அதன் கொம்புகளை திருடி வருகிறார்கள். |



காண்டா மிருகம் மற்றும் யானைகளை காக்கும் பணியில் ரோந்துக்கு சென்றபோது அதிகாரிகள், இரத்த வெள்ளத்தில் கிடந்த காண்டா மிருகத்தை பார்த்தனர். பின் அந்த காண்டாமிருகத்தின் கொம்பை திருடிய திருடனை வனத்துறை அதிகாரிகள் வளைத்து பிடித்தனர். |




ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார். த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.
த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட. ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.
இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது. இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, "அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை," என்றார்.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக