வியாழன், 11 ஆகஸ்ட், 2011

11.08.2011இன் செய்திகள்

லண்டன் கலவரத்தால் தன் கடை அழிந்ததை அடுத்து எல்லாமே முடிந்து விட்டது என்று இடிந்து போயுள்ள ஈழத்து உறவு.

இலண்டனில் கடந்த சில நாட்களாக தொடர்ந்த வன்முறைகளால் பல வர்த்தக கட்டிடங்கள் கொள்ளையடிக்கப்பட்டதுடன், தீக்கிரையாக்கப்பட்டன. இலங்கையைச் சேர்ந்த ஒருவரது கடையும் அழிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பிரிட்டனில் குடியேறிய சிவாகரன் கந்தையா என்பவரது கடையே கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுள்ளது என ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்துமே முடிந்துவிட்டது. எனது ஜீவனோபாயம் முடிந்துவிட்டது” என்று சிவாகரன் கூறியுள்ளார்.கிழக்கு லண்டனில் பல்பொருள் அங்காடி நடத்தி வந்ததாகவும், கடந்த 11 வருடங்களாக விடுமுறை எதுவும் பெறாமல் வாராந்தம் 90 மணித்தியாலங்கள் உழைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இவரது கடையின் பொருட்கள் சூறையாடப்பட்டதுடன்,

முற்றாக நொருக்கப்பட்டும் உள்ளது. இவரது கடைக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 50 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரது கட்டிடத்திற்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்த போதிலும் அதனுள்ளிருந்த பொருட்கள் காப்புறுதி செய்யப்படவில்லை.எனக்கு தூக்கம் இல்லை. நான் அனைத்து இரவுகளிலும் அழுகின்றேன். அவர்கள் எனது கடைக்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை பார்க்க முடியாதுள்ளது என்று சிவாகரன் கவலை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் உள்ள கிரேட் யார்மவுத் கடற்கரையில் பெக் ஆண்டர்சன்(15) என்ற சிறுமி தனது அக்கா, தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

மணலை சுவர் போல அமைத்து அதன் கீழே பிரமாண்ட குழி பறித்தனர். இன்னும் அதிக தூரத்துக்கு குகை அமைப்பதற்காக பெக் உள்ளே சென்றாள். அப்போது எதிர்பாராவிதமாக மணல் சுவர் சரிந்தது. வெளிப் பக்கம் விளையாடிய சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

பெக் மட்டும் உள்ளே சிக்கினாள். தகவல் கிடைத்து பொலிசார், கடலோர பாதுகாப்பு வீரர்கள் விரைந்தனர். கால் மணி நேர போராட்டத்துக்கு பிறகு பெக் மீட்கப்பட்டாள்.

பேச்சு, மூச்சின்றி இருந்த பெக் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் இருக்கிறாள்.

"மண்ணில் புதைந்ததால் கால் மணி நேரம் மூச்சு விட முடியாமல் இருந்திருக்கிறாள். அவள் பிழைத்தது அதிர்ஷ்டவசம்" என்கின்றனர் மருத்துவர்கள்.


ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என கடவுளிடம் வேண்டுகின்றோம்!


கிளிநொச்சியில் அண்மைக் காலத்தில் கருச்சிதைவுகள் காரணமாக இளம் கர்ப்பிணிப் பெண்கள் மரணமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை பூநகரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இவ்வாறு மரணமாகியுள்ளார்.


இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரான லாக்சன் ரஜனிதேவி (வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண்ணே மரணமானவராவார். இந்த இளம்பெண் 3 மாதக் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் சட்டத்துக்கு முரணான வகையில் வீட்டிலேயே கருக்கலைப்பை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிக அளவான இரத்தப்போக்கு ஏற்பட்டது எனவும் இவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி திருவையாறு பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் மற்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட 9வயது மதிக்கத்தக்க சிறுவனை யாழ்ப்பாணத்திலுள்ள சான்றிதழ் பெற்ற சிறுவர் காப்பகத்தில் இணைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சிறுவன் செவ்வாய்க்கிழமை பகல் திருவையாறு பிரதேசத்தில் நின்றதாக பொதுமக்கள் கொடுத்த பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மாவட்டப் பொலிஸார் குறித்த சிறுவனை பாதுகாப்பாக மீட்டு நேற்று முன்தினம். நீதிமன்றில் பொலிஸார் அஜர்ப்படுதியிருந்தனர்.

இதன்போதே சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் சிறுவனை சான்றிதழ் பெற்ற சிறுவர் காப்பகம் ஒன்றில் இணைத்து விடுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை குறித் சிறுவன் சிவப்பு நிறத்தில் ரீசேட் ஒன்றினையும் மண்நிறத்தில் நீளக்காற்சட்டையொன்றினையும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2000 குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிசென்றுள்ளனர்:காவல்துறைத் திணைக்களம்.


மோசமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 2000 குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.


காவல்துறைத் திணைக்களத்தினால் அண்மைய அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குற்றவாளிகள் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும், குறிப்பாக அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் தப்பிச் சென்றுள்ளனர்.

வெளிநாடுகளில் பதுங்கயிருந்த, மோசமான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சில குற்றவாளிகள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி படகுகள் மற்றும் போலிக் கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.



பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நேற்று இலங்கை சென்றடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்த பி.என்.எஸ். ஷமர் மற்றும் பி.என்.எஸ்.நாஸர் ஆகிய இரண்டு கப்பல்களையும் கடற்படை சம்பிரதாய முறைப்படி சிறிலங்கா கடற்படையினர் வரவேற்றனர்.
சீனாவில் நடைபெற்ற ‘புரூனே கடற்படைத் தொகுதி மீளாய்வு-2011′ நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திம்பும் வழியிலேயே அதன் நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையில் இக்கப்பல்கள் இலங்கை வந்துள்ளன. இவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என கடற்படை பேச்சாளர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்தக் கப்பல்களில் வருகைதந்த நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையிலான உயரதிகாரிகளடங்கிய குழுவினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்கவை கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையத்தில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரு நாட்டுக் கடற்படை விடயங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், ஞாபகச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.

ஆண்களுக்கு அழகே நிமிர்ந்து நின்று பேசுவதுதான்.எனவே உயரமான ஆண் உறுப்பினர்கள் நிமிர்ந்து நின்று பேச வசதியாக சட்டசபையில் மைக்குகளை மாற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஜெயக்குமாருக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் சூடான விவாதங்கள் மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான விஷயங்களும் அவ்வப்போது களைகட்டும். அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நேற்று நடந்தது.மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நல்ல உயரமானவர். நேற்று அவர் பேசுகையில் மைக் முன்பு குணிந்தபடி பெரும் சிரமப்பட்டு பேசினார். இதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா டக்கென எழுந்தார்.

ஆண்களுக்கு லட்சணமே நிமிர்ந்தபடி பேசுவதாதன். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போல உயர்ந்த மனிதர்கள் பேசும்போது மைக் முன்பு குணிந்து கொண்டு பேச வேண்டியுள்ளது. இதேநிலைதான் உயரமான மற்றவர்களுக்கும் ஏற்படுகிறது. எனவே ஆண்கள் ஆண்களாகவே பேசும் வகையில் மைக்குகளை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.அதிமுக உறுப்பினர்கள் மைசைகளைத் தட்டி முதல்வரின் கோரிக்கையை வரவேற்றனர். குறிப்பாக உயரமான உறுப்பினர்கள் படு வேகமாக மேசைகளைத் தட்டியதைக் காண முடிந்தது.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜெயக்குமார், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வருக்கு உறுதியளித்தார்.


கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com