ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

முக்கிய செய்திகள் [04.09.2011]


கரூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 7 சிறார்கள் நீரில் மூழ்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஒரு சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற மூவரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்த சிலர், கரூர் மாவட்டம் நன்னியூர் புதூர் என்ற கிராமத்தில் நடந்த திருவிழாவுக்காக வந்திருந்தனர். அப்போது சிறார்கள் 7 பேர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

காவிரியில் தற்போது தண்ணீர் அதிக அளவில்ஓடிக் கொண்டிருப்பதால் ஏழு பேரும் ஆற்றின் வேகத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தோர் வேகமாக ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்புப் படையினருக்கும், போலீஸாருக்கும் தவகல் போய் அவர்களும் விரைந்து வந்தனர்.

இதில், 3 சிறுவர்கள், ஒரு சிறுமி என நான்கு பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. மற்ற 3 பேரையும் மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில், பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி, சீருடையிலேயே காரின் முன்பக்க மேற்பகுதியில் ஒரு பெண்ணை ஏற்றி வைத்து அவருடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கண்காணிப்புக் கேமராவில் இந்த்க காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இருப்பினும் அவர் மீது கிரிமினல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாது என்று நியூ மெக்ஸிகோ மாகாண காவல்துறை தலைவர் டிம் ஜான்சன் கூறியுள்ளார். இது பணி நேரத்தின்போது விதிமுறைகளை மீறி நடந்த செயல் மட்டுமே தவிர கிரிமினல் செயல் அல்ல என்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

சிக்கிய அதிகாரி தற்போது சம்பளத்துடன் கூடிய விடுப்பில் (சஸ்பெண்ட் உத்தரவுக்குத்தான் அங்கு அப்படி ஒரு பெயர்) அனுப்பப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், தனது சுயநலனுக்காக அவர் செய்த செயலால் காவல்துறைக்குக் கெட்ட பெயராகி விட்டது. அவரது செயலால் மிகவும் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தவறான பெயரிலிருந்து எங்களை விடுவித்துக் கொண்டு மீண்டும் நல்ல பெயரை ஈட்ட கடுமையாக பாடுபடுவோம் என்றார் ஜான்சன்.

கார் மீது செக்ஸ் உறவு கொண்ட காவல்துறை அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சான்டா பே என்ற கடற்கரை ரிசார்ட்டுக்கு அருகில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்தி ஜூலை மாதக் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இது நடந்திருப்பதாக தெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 77 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமான சொத்துடையவராக, முன்பு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பிரபுல் பட்டேல் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.33 கோடியாகும்.


மிக குறைந்த சொத்து மதிப்பு உடையவர், முன்பு இரயில்வே அமைச்சராக இருந்தவரும், தற்போது மேற்கு வங்க முதல்வராக இருப்பவருமான மம்தா பானர்ஜி ஆவார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.6.7 இலட்சம். இதில் 10 கிராம் தங்கமும் அடக்கம்.தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அமைச்சரவைச் செயலராக இருந்து ஓய்வு பெற்ற கே.எம்.சந்திரசேகர், இந்த தகவல்களை அமைச்சர்களிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளார். 


பிரதமர் மன்மோகன் சிங், தனக்கு சண்டிகரில் 4,500 சதுர அடியில் இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளதென்றும், அதனைத் தான் 1987இல் ரூ.8,62,000 வாங்கியதாகவும், அதனை 1997-98இல் ரூ.8.45 இலட்சம் செலவு செய்து கட்டியுள்ளதாகவும், அதன் தற்போதைய சந்தை மதிப்பு அ.90 இலட்சம் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் புதுடெல்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டை 1991இல் ரூ.4,18,000 வாங்கியதாகவும், அதன் தற்போதைய மதிப்பு ரூ,88,67,000 என்றும் கூறியுள்ளார்.


இவைகள் மட்டுமின்றி, பாரத அரசு வங்கிகளின் கணக்குகளிலும், வைப்பு நிதிகளிலும் வைத்துள்ள ரூ.3,21,93,471 கணக்குகள் விவரங்களையும் வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக பிரதமரின் சொத்துக்கள் மதிப்பு 4.8 கோடியாகிறது. 
இதேபோல் முழுமையான விவரங்களுடன் மற்ற அமைச்சர்களின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் பிரதமரின் http://pmindia.nic.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் சில தகவல்கள் முழுமையாக இல்லை.


மாணவர் கடத்தலின் கும்பல் தொடர்ச்சியாக குடும்பத்துக்கு மிரட்டல் :திண்டாடும் போலீசார்.

சிவகாசி அருகே மாணவர் கடத்தல் வழக்கில், அவரது தந்தை மொபைல் போனுக்கு வரும் தொடர் மிரட்டலால், துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்பாண்டியன்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவரது மகன் கோடீஸ்வரன், 14. திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இவர், கடந்த 30ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.நேற்று ரமேஷ்பாண்டியன் மொபைல் போனில், இந்தியில் பேசிய நபர், மகனை விடுவிக்க, வங்கி கணக்கு எண் கொடுத்து, ரூ.25 லட்சம் போடுமாறு மிரட்டினார்.
இது தொடர்பாக திருத்தங்கல் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் எஸ்.பி., நஜ்மல் கோதா திருத்தங்கலில் முகாமிட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் மணிவேல், வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் தனி அறையில் வைத்து , சாமிநாதன் ஏ.டி.எஸ்.பி., விசாரித்தார். அப்போது, ரமேஷ் பாண்டியன் மொபைலுக்கு இந்தியில் பேசிய நபர் , ""ஏன் இன்னும் வங்கியில் பணம் போடவில்லை,'' என்றார்.

இந்தி தெரிந்தவர் மூலம், ""ரூ.25 லட்சத்தை வங்கியில் ஏற்க மறுக்கின்றனர். பான் கார்டு எண் தந்தால் , அதை காட்டி போடுகிறோம்,'' என கூறப்பட்டது. மறுமுனையில் பேசிய நபர்,"" ரூ.10ஆயிரம், 10 ஆயிரமாக போடுங்கள்,'' என்று கூறினார். கடத்தல்காரர்கள் 13 இலக்கம் கொண்ட "09234 77715 249' எண்ணில் இருந்து பேசுவதால், எங்கிருந்து பேசுகின்றனர் என்பது தெரியாமல் போலீசார் திணறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

யாழ்மண்ணின் யாழ்தேவி பாடல்

yazhman.com